Wednesday, May 28, 2008

இட்லி உப்புமா

தேவையானவை:

இட்லி- 10,
பெரிய வெங்காயம்-2,
இஞ்சி- பொடியாக நறுக்கியது- 1/4 ஸ்பூன்,
பச்சை மிளகாய்-5,
பீன்ஸ், கேரட், குடமிளகாய்- பொடியாக நறுக்கியது- 1 கப்
உப்பு- கொஞ்சம்,

செய்முறை:

இட்லியை ப்ரிஜ்ஜில் வைத்தால் உதிர்த்தால் உதிராக வரும். கெட்டியான வாணலியை அடுப்பில் வைத்து கடுகு, கடலைபருப்பு, உளுத்தம்பருப்பு, பச்சைமிளகாய் இஞ்சி, போட்டு வதக்கி, அதனுடன் காய்கள், உப்பும் போட்டு 1 நிமிடம் வதக்கவும். கொஞ்சநேரம் வதங்கினால் போதும். பின் உதிர்த்து வைத்துள்ள இட்லியை போட்டு கொஞ்சம் எண்ணெய் ஊற்றி வதக்கவும். முதலிலேயே இட்லி வெந்து இருப்பதால் அதிக நேரம் விட வேண்டாம். இட்லி கையில் ஒட்டாமல் இருக்க கையில் கொஞ்சம் எண்ணெய் தடவி கொண்டு உதிர்க்கலாம்.

No comments:

Post a Comment