Thursday, May 29, 2008

சேமியா மசாலா உப்புமா

தேவையானவை:

மெல்லிய (அணில்) சேமியா - 1 பாக்கெட் - 200கிராம்
பெரிய வெங்காயம் - 3
பட்டை- 1, லவங்கம்- 2, ஏலக்காய்-2
தக்காளி - சிறியதாக இருந்தால்-5,
பச்சை மிளகாய் - 6,
இஞ்சி பொடியாக நறுக்கியது - 1/2 ஸ்பூன்
பிடித்த காய்கள் - மெல்லியதாக நீளமாக நறுக்கியது- 100 கிராம்,
குடமிளகாய்- 1
உப்பு- தேவையானது,
எண்ணெய்-தேவையானது

செய்முறை:

வறுத்த சேமியாவே கிடைக்குது, சேமியா 1பங்குக்கு 2 பங்கு தண்ணீர் தேவை. வாணலியில் கடுகு, பட்டை, லவங்கம், ஏலக்காய் போட்டு லேசாக வறுபட்டபின் வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் போட்டு கொஞ்சம் வதங்கிய பின் காய்களை போட்டு 1 நிமிடம் வதக்கி தண்ணீர் ஊற்றி உப்பும் போட்டு கொதி வரும்போது சேமியாவை போட்டு கிளறவும். சேமியா வேகும்போது காய்களும் நன்கு வெந்துவிடும். தண்ணீர் தேவையான அளவு மட்டுமே ஊற்ற வேண்டும். ஜாஸ்தி ஆனால் கொஞ்சம் சேமியாவை போட்டு கிளறவும். இல்லையெனில் தண்ணீர் கொதிக்கும் சமயம் கொஞ்சம் எடுத்து வைத்து தேவைஎனில் ஊற்றி கொள்ளலாம். அதிகம் ஆனால் சேமியா இல்லையெனில் கொஞ்சம் ரவை இருந்தால் போட்டு கொள்ளலாம். தக்காளியை பொடியாக நறுக்கி போடலாம். இல்லையெனில் மிக்ஸியில் 1 நிமிடம் அரைத்தும் போடலாம்.

No comments:

Post a Comment