Monday, May 26, 2008

உப்புமா வகைகள்

உப்புமாவை ருசியாக செய்தால் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள். அதை ருசியாக செய்யகூடிய பக்குவம் தெரியாததால் பலரும் செய்வது இல்லை. உப்புமா என்றால் வேண்டாம் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். அதை சரியானபடி, வெவ்வேறு சுவைகளில் செய்தால் பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். உப்புமாவை உதிராக சாப்பிடுபவர்களும் உண்டு. கொஞ்சம் குழைவாக சாப்பிடுபவர்களும் உண்டு. உதிராக வேண்டும் என்றால் 1 பங்கு ரவைக்கு 2 பங்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். குழைவாக வேண்டும் எனில் 2, 1/2 பங்கு என்ற அளவில் ஊற்ற வேண்டும். தண்ணீர் கொதி வரும்போது அடுப்பை சிறியதாக எரியவிட்டு ரவைபோட்டு கிளறினால் கட்டி தட்டாது.இறக்கியபின் 1 ஸ்பூன் நெய் [அ] தேங்காய் எண்ணெய் ஊற்றி கிளறினால் சூப்பர் வாசனையுடன் இருக்கும்.

கோதுமை ரவை உப்புமா



தேவையானவை:

கோதுமை ரவை- 1 கப்
தண்ணீர்- 2 கப்
பிடித்த காய்கள் பொடியாக நறுக்கியது- 1 கப்
பச்சை மிளகாய்-4, பெரிய வெங்காயம்- 1 பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்
இஞ்சி பொடியாக நறுக்கியது- 1 ஸ்பூன்
எண்ணெய்- கொஞ்சம்
உப்பு தேவையானது

செய்முறை:

ப்ரஷர் பேனை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்தபின், கடலைபருப்பு, உளுத்தம்பருப்பு, கொஞ்சம் பெருங்காயம் போட்டு பொன் கலர் ஆனபின் வெங்காயம் போட்டு கொஞ்சம் வதங்கியபின் காய்கள், இஞ்சி, பச்சை மிளகாய் போட்டு ஒரு கிளறு கிளறி தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் உப்பு போட்டு ரவையை தூவியபடி போட்டு கிளறி ப்ரஷர் பேனை மூடி வைத்து ஒரு விசில் வந்தவுடன் இறக்கி, சிறிது நேரம் கழித்து திறந்து மேலே கொஞ்சம் நெய் [அ] தேங்காய் எண்ணெய் ஊற்றி கலந்து சாப்பிடவும். சுவையான கோதுமை ரவை உப்புமா தயார்.

No comments:

Post a Comment