Tuesday, May 27, 2008

ரவா உப்புமா

தேவையான பொருள்கள்:

ரவை - 1 கப்,
பெரிய வெங்காயம்- 2 ,
இஞ்சி- சிறியதுண்டு,
பச்சை மிளகாய்-5,
உப்பு- தேவையானவை,
கறிவேப்பிலை, மல்லி கொஞ்சம்.
தாளிக்க- கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைபருப்பு.

செய்முறை:

ரவை வாணலியில் சிவக்க வறுக்க வேண்டும். அதே வாணலியில் 5 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கடலைபருப்பு, உளுத்தம்பருப்பு, பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். கொஞ்ச நேரத்தில் வதங்கி விடும். 2 கப் தண்ணீர் ஊற்றி கொதி வரும்போது ரவைபோட்டு சிம்மில் வைத்து கட்டி விழாமல் கிளறி தீயை குறைத்து 5 நிமிடம் வைத்தால் நன்கு வெந்து விடும். கடைசியில் கறிவேப்பிலை, மல்லி போட்டு சாப்பிடவும். சுவையான, மணமுள்ள ரவா உப்புமா ரெடி.

No comments:

Post a Comment