Tuesday, June 3, 2008

மெக்ரோனி புளிகுழம்பு

தேவையானவை:

மெக்ரோனி- 200கிராம்,
பெரிய வெங்காயம்- 2,
தக்காளி-5,
புளி விழுது- 1 ஸ்பூன்,
இஞ்சி, பூண்டு விழுது- 1 ஸ்பூன்,
மிளகாய்தூள்- 1 ஸ்பூன்,
மல்லி தூள்- 1/2 ஸ்பூன்,
உப்பு தேவையானவை.
வெந்தயம், சோம்பு, - 1/4 ஸ்பூன்.
எண்ணெய்- 50 கிராம்.

செய்முறை:

மெக்ரோனியை சுடுநீரில் போட்டு கொதி வந்தவுடன் வடித்து, மறுபடியும் நீர் ஊற்றி வடித்து வைக்கவும். வெந்தயத்தை லேசாக வறுத்து, சோம்பு, தக்காளி, வெங்காயத்துடன் சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.
கெட்டியான வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து, இஞ்சி, பூண்டு விழுது,மஞ்சள் பொடி போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கி அரைத்து வைத்துள்ளதை போட்டு நன்கு வதக்கவும். எண்ணெய் பிரிந்து மேலே வரும்போது மிளகாய்பொடி, மல்லிபொடி,உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வதக்கி, புளி விழுதை சேர்க்கவும். சிறிய கட்டி வெல்லம் சேர்க்கவும். 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதி வரும் போது வடித்து வைத்துள்ள மெரோனியை போட்டு சிம்மில் வைத்து மூடிவிட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும். கொஞ்ச நேரத்தில் குழம்பு பதம் வந்து விடும். மசாலா வாசனையுடன் குழம்பு சூப்பராக இருக்கும். மல்லி இலை போட்டு சாப்பிடவும்.இது சாப்பாட்டுக்கும், டிபனுக்கும் ஏற்றது. தேவையானால் இன்னும் தண்ணீர் ஊற்றி கொள்ளலாம்.மெக்ரோனி தண்ணீரை உறிந்து கொள்ளும்.

No comments:

Post a Comment