Thursday, June 12, 2008

தக்காளி ரசம் - 2 ம் வகை

தேவையான பொருள்கள் :

வேக வைத்த துவரம் பருப்பு - 2 ஸ்பூன்
தக்காளி - 2
ரசப்பொரி - 2 ஸ்பூன்
புளி விழுது - 2 ஸ்பூன்
கடா பெருங்காயம் - 1/4 ஸ்பூன்
உப்பு - ருசிக்கு ஏற்ப
தாளிக்க - கடுகு, சீரகம், கறிவேப்பிலை
மல்லி இலை - கொஞ்சம்
நெய் - 1 ஸ்பூன்

செய்முறை :

புளியில் தக்காளியை நன்கு கரைத்து உப்பு, மஞ்சள்தூள் , ரசப்பொடி போட்டு பச்சை வாசனை போக கொதிக்க விடவேண்டும். பருப்பில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கரைத்து வைத்து, தாளிக்கும் கரண்டியில் நெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், கடா பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு, கரைத்து வைத்துள்ள பருப்பில் கலந்து, தக்காளி+புளியில் ஊற்றி நன்கு கலக்கிவிட்டு நுரைத்து வந்தவுடன் இறக்கிவிடவும். மல்லி இலை போடவும். பெருங்காய வாசனையுடன் ரசம் சூப்பராக இருக்கும். காரம் இன்னும் அதிகம் தேவை எனில் தாளிக்கும் போது வரமிளகாய் கிள்ளி போட்டு தாளிக்க்லாம்.

No comments:

Post a Comment