Wednesday, June 11, 2008

தக்காளி சூப்

தேவையான பொருள்கள் :

பெங்களூர் தக்காளி - 1/4 கிலோ
நாட்டு தக்காளி - 1/4 கிலோ
கேரட் - 2
பெரிய வெங்காயம் மீடியம் அளவில் - 1
கார்ன் ஃப்ளார் - 2 ஸ்பூன்
வெண்ணெய் - 50 கிராம்
மிளகு - 3 ஸ்பூன்
பூண்டு - 2 பல்
லவங்கம் - 1
உப்பு - தேவையான அளவு


செய்முறை :

தக்காளி, வெங்காயம், பூண்டு, மிளகு, லவங்கம், கேரட், கல் உப்பு போட்டு சிறிய குக்கரில் போட்டு 1 விசில் வந்ததும் இறக்கி ஆறவிடவும். தண்ணீரில் கார்ன்ஃப்ளார் [அ] மைதாமாவை கரைத்து கொள்ளவும். ஆறிய தக்காளியை மிக்ஸியில் அடித்து [ கூழ் போல் வரும்] தேவையான தண்ணீர் கலந்து கார்ன் ப்ளார் மாவை அதில் ஊற்றி கொதிக்க விடவும். பச்சை வாசனை போனவுடன் இறக்கவும். மேலே வெண்ணெய் போட்டு சூடாக சாப்பிடவும். நாட்டு தக்காளி புளிப்பு சுவைக்கு, பெங்களூர் தக்காளி கிரேவிக்கு.தேவையானால் மட்டும் கார்ன் ஃப்ளார் சேர்க்கவும். சாப்பிடும் போது கேரட்டை மிகவும் பொடியாக கட் செய்து அதன் மேல் போடலாம். சூப் கொதிக்கும் சமயம் கொஞ்சம் நூடுல்ஸ் இருந்தால் கையால் பொடித்து சேர்த்தால் சுவையாக இருக்கும். சூப் குடித்தால் உடலுக்கு நல்லது. நன்கு பசி எடுக்கும். சத்துள்ளது. இதே போல் எந்த காய்கள் சேர்த்தும் செய்ய்லாம். சீக்கிரமும் செய்து விடலாம்.


No comments:

Post a Comment