Thursday, June 12, 2008

தக்காளியில் கீரை மசியல்

தேவையான பொருள்கள் :

பெங்களூர் தக்காளி - 1/4 கிலோ
பாசி பருப்பு - 50 [100 ] கிராம்
கீரை - 1 கட்டு
பச்சை மிளகாய் - 6
பெருங்காயம் - கொஞ்சம்
மஞ்சள் பொடி - கொஞ்சம்
கல் உப்பு - ருசிக்கு ஏற்ப
தாளிக்க எண்ணெய் - 2 ஸ்பூன்

பூண்டு வாசனை பிடித்தவர்கள் தேவையானால் சேர்த்து கொள்ளலாம். பூண்டு சேர்த்தால் பெருங்காயம் சேர்க்க வேண்டாம். சமையலுக்கு பாசிபருப்பை உபயோகபடுத்தும் போது பொன் நிறமாக வறுத்தால் வேகும் போது குழைவுவாக இல்லாமல் மலர்ந்து வெந்து இருக்கும்.

செய்முறை :

கீரையை ந்ன்கு சுத்தம் செய்து பொடியாக நறுக்கி,பருப்பு, தக்காளி, பச்சை மிளகாய், ம்ஞ்சள்பொடி, உப்பு போட்டு 1 விசில் விட்டாலே நன்கு வெந்துவிடும். வாணலியில் நெய் [அ] தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், பெருங்காயம் போட்டு வறுபட்டவுடன், வெந்த பருப்பு கீரையை நன்கு மசித்து அதில் சேர்க்கவும்.குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுக்கலாம். இதுபோல் செய்வதால் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள், சீக்கிரம் ரெடி ஆகிவிடும்.

No comments:

Post a Comment