Monday, June 9, 2008

கொத்தவரங்காய் பருப்பு உசிலி

பருப்பு உசிலி என்பது பருப்பை ஊறவைத்து கெட்டியாக உப்பு, காரம் போட்டு மிக்ஸியில் அரைத்து ஆவியில் வேக வைத்து, ஆறியபின் கையால் உதிர்த்து, இல்லையெனில் ஆறிய பின் மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றினால் பூப்போல் உதிராக இருக்கும். இதை வேக வைத்த காய்களுடன் கடைசியாக சேர்க்க வெண்டும். இதற்கு எந்த பருப்பு வேண்டுமானாலும் சேர்க்கலாம். கடலைபருப்பு,
துவரம்பருப்பு, பட்டாணிபருப்பு, எதுவாக இருந்தாலும் அவரவர் விருப்பம். உசிலிக்கு எந்த காயில் செய்தாலும் காயை பொடி, பொடியாக நறுக்கினால் உசிலி நன்றாக இருக்கும். பொடியாக நறுக்குவதால் காய் சீக்கிரம் வேகும்.காயின் கலர் மாறாது.காயின் வாசனை அப்படியே இருக்கும். உசிலியை எல்லா வகையான காய்களிலும் செய்யலாம். கீரைகளிலும் செய்யலாம். இதற்கு தேங்காய் சேர்க்க வேண்டாம். கடைசியில் வாசனைக்கு [தேவையானால்] 1/2 தேங்காய் எண்ணெய் ஊற்றி இறக்கலாம். ஆவியில் வேக வைத்து செய்வதால் எண்ணெய் அதிகம் சேர்க்க வேண்டாம். யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஃப்ரஷர் பேனோ, சிறிய குக்கரோ இருந்தால் அதில் சிறிய கிண்ணத்தில் அரைத்த பருப்பை கீழே வைத்து அதன் மேல் நறுக்கிய காய்களை சுத்தம் செய்து பிழிந்து வைத்தாலே போதும். 1 விசிலில் வெந்துவ்டும். காய்களை தனியாகவும் வேகவிடலாம்.சீக்கிரம் சமையல் ஆக வேண்டும் என்றால் சேர்த்து வேகவிட்டு பின் தாளிக்கலாம்.


தேவையான பொருள்கள் :


கொத்தவரங்காய் - 1/4 கிலோ
பட்டாணிபருப்பு - 25 கிராம் [அ] 50 கிராம்
வரமிளகாய் - 5
கல் உப்பு - 1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை - கொஞ்சம்


செய்முறை :

பருப்பை முதலிலேயே ஊறவிட்டு நன்கு வடியவிட்டு அதனுடன் வரமிளகாய், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்து ஆவியில் வேக விடவும். காயை பொடியாக நறுக்கி நன்கு கழுவி வாணலியில் கொஞ்சம்மாக் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், பெருங்காயம், மஞ்சள்தூள் போட்டு
காயை போட்டு லேசாக தண்ணீர் தெளித்தால் சீக்கிரம் வெந்துவிடும்.காய்க்கு கொஞ்சம் உப்பு சேர்க்கவும். நீர் சுண்டியபின் வேக வைத்து உதிர்த்து வைத்துள்ள பருப்பை போட்டு சிம்மில் எரியவிட்டு நன்கு கிளறி [ தேவை எனில் 1/2 தேங்காய் எண்ணெய் கடைசியில் ஊற்றி] இறக்கவும்.பருப்பு உசிலி தயார்.


இந்த உசிலியில் கொஞ்சம் தயிர், கேரட், வெள்ளரிக்காய், பெரியவெங்காயம் நீளமாக நறுக்கி காரத்துக்கு பச்சை மிளகாய், உப்பு கொஞ்சம் சேர்த்தால் சப்பாத்திக்கு, தோசைக்கு தொட்டு கொள்ளலாம். கலந்த சாதத்துக்கும் தொட்டு கொள்ள நன்றாக இருக்கும்.

No comments:

Post a Comment