Tuesday, June 10, 2008

தக்காளி சாஸ்

தேவையான பொருள்கள் :

பெங்களூர் தக்காளி - 1 கிலோ
சர்க்கரை - 100 கிராம்
புதிய மிளகாய் பொடி - 50 கிராம்
பெரிய வெங்காயம் - சிறியதாக - 1
பூண்டு - 2 பற்கள் மட்டும்
உப்பு தேவையானது
சோடியம் பென்சோயேட் - 1/4 ஸ்பூன் இது போடாமலும் செய்யலாம்.

செய்முறை :

தக்காளியை பொடியாக நறுக்கி, அதனுடன் வெங்காயம், பூண்டு சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும். வடிகட்டும் வலையில் தக்காளியின், விதை, தோல் எல்லாம் தங்கிவிட வேண்டும். தக்காளியின் சாறு மட்டும் நுரை போல் இருக்கும். தக்காளியின் சாறை பெரிய கெட்டியான வாணலியில் கொஞ்சம், கொஞ்சமாக ஊற்றி சுண்ட விட வேண்டும். அப்படியே ஊற்றினால் கொதிக்கும் போது வெளியில் எல்லாம் தெளித்து நிறைய வேஸ்ட் ஆகும். கொஞ்சமாக உற்றும்போது சீக்கிரமாக சுண்டி விடும். மிளகாய்தூள், உப்பு, சர்க்கரை [ தேவையானால் பிரிசர்வேட்டிவ்] போடவும். இதன் பதம் கரண்டியில் எடுத்தால் ச்ட்னிபோல் இருக்கும். ஆறிய பின் பாட்டிலில் எடுத்து வைக்கவும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடகூடிய ஐட்டம். அதுவும் வீட்டிலேயே செய்தால் செலவும் அதிகம் ஆகாது. ஃப்ரிஜில் எடுத்து வைத்து கொண்டு தேவையான போது பயன்படுத்தவும்.

1 comment:

  1. உங்கள் ப்ளாக் நல்ல ப்ளாக்

    ReplyDelete