Friday, June 6, 2008

காளான் சாதம்

தேவையானவை:

உதிராக வடித்து வைத்துள்ள சாதம்- 3 கப்
பெரிய வெங்காயம்-2
வெங்காய தாள்- கொஞ்சம்
இஞ்சி - பொடியாக நறுக்கியது- 1/2 ஸ்பூன்
பூண்டு - பொடியாக நறுக்கியது- 1 ஸ்பூன்
பச்சை மிளகாய்-5
மிளகுதூள்- கொஞ்சம்
அஜினமோட்டோ- கொஞ்சம்
உப்பு - தேவையானவை
நெய் [அ] எண்ணெய்- 3 ஸ்பூன்
காளான் - 200 கிராம்

செய்முறை:

கெட்டியான வாணலியில் கொஞ்சம் எண்ணெய் [அ] நெய் ஊற்றி வெங்காயத்தை மெல்லியதாக நறுக்கி வதக்கவும். அதனுடன் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டை சேர்த்து வதக்கவும். காளானை தேவையான அளவில் கட் செய்து நன்கு நீரில் கழுவி கைகளால் அழுத்தி பிழிந்தால் அதில் நீர் எல்லாம் வந்து விடும். அதை வெங்காயத்தில் சேர்த்து வதக்கவும். மிளகுதூள், அஜினமோட்டோ, உப்பு சேர்த்து வதக்கவும். அடுப்பை சிம்மில் எரிய விட்டு வதக்கவும். நன்கு சுண்டியபின் 1 ஸ்பூன் நெய் ஊற்றி சாதத்தை போட்டு கிளறி இறக்கும் போது வெங்காயதாளை பொடியாக நறுக்கி மேலே தூவி இறக்கவும். காளான் சாதம் தயார். மசாலா வாசனை வேண்டும் என்றால் காளானை போடும் போது 1 ஸ்பூன் தூவிகொள்ளலாம். சாப்பிடும்போது (தேவையானால்) பூந்தியோ, மிக்ஸரோ தூவி சாப்பிடவும். இல்லையெனில் கேரட்டை துறுவி மேலே போட்டு கொள்ளலாம். அவரவர் இஷ்டம் போல் சாப்பிடலாம்.

No comments:

Post a Comment