Tuesday, June 3, 2008

பூசணிக்காய் குழம்பு

தேவையானவை:

பூசணிக்காய்- 1/4 கிலோ,
புளி- எலுமிச்சை அளவு,
தக்காளி- 3
சின்ன வெங்காயம்-20,
பச்சை மிளகாய்-4,
உப்பு- தேவையான்வை.

அரைக்க:

கொஞ்சம் எண்ணெய் ஊற்றி வெந்தயம் கொஞ்சம், சிறிய கட்டி பெருங்காயம் வறுத்து, கடலைபருப்பு- 2 ஸ்பூன், உளுத்தம்பருப்பு-1/4 ஸ்பூன், தனியா- 3 ஸ்பூன், வரமிளகாய்-6, 3 ஸ்பூன் தேங்காய் துறுவல் சேர்த்து பொன் நிறத்தில வறுத்து கொண்டு மிக்ஸியில் நைசாக அரைத்து கொள்ளவும். அரைத்ததை எடுத்து விட்டு அதிலேயே தக்காளியை அரைத்து கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து காய்ந்ததும் கடுகு தாளித்து வெங்காயத்தை நறுக்கி போட்டு வதக்கவும். பின் காயை தேவையான அளவில் கட் செய்து வதக்கவும். மஞ்சள்பொடி, உப்பு,புளி தண்ணீர் சேர்த்து மூடி வைத்தால் சீக்கிரம் வெந்துவிடும். பின்னர் தக்காளியை சேர்த்து கொதிக்கவிட்டு சுண்டியபின் அரைத்து வைத்ததை ஊற்றி கொதிக்க விட்டு தேவையான தண்ணீர் சேர்த்து சிம்மில் எரியவிட்டு கொதிக்க விடவும். இந்த குழம்பு, தண்ணீயாகவும் இருக்க கூடாது, கெட்டியாகவும் இருக்க கூடாது. கறிவேப்பிலை, மல்லி இலை போடவும்.

No comments:

Post a Comment