Thursday, June 12, 2008

தக்காளி சாதம் [ 2 வகை]

தேவையான பொருள்கள் :


அரிசி - 2 கப்
தக்காளி - 300 கிராம்
புதினா - 20 இலை
மல்லி இலை - கொஞ்சம்
பச்சை மிளகாய் - 5
இஞ்சி - சின்ன துண்டு
பூண்டு - 4 பல்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
தனியா தூள் - 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
தேங்காய் பால் [அ] கெட்டியான பாலில் 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து கொள்ளவும்.1 - கப்
எண்ணெய் - 50 கிராம்
பட்டை - 1,லவங்கம் - 2 ஏலக்காய் - 2 பிரிஞ்சி இலை - 1
கல் உப்பு - ருசிக்கு

செய்முறை :


தக்காளியுடன் புதினா, மல்லி, இஞ்சி, பூண்டு,உப்பு, பச்சைமிளகாய் அரைத்து வைக்கவும். அரிசியை நன்கு அலம்பி [ கழுவி] தண்ணீரை வடித்து தக்காளி கலவை + பாலில் ஊறவைக்கவும். 1/2 மணி நேரம் ஊறட்டும். குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை போட்டு தாளிக்கவும். பின் மசாலாவில் ஊறி கொண்டு இருக்கும் அரிசியை போட்டு வதக்கவும். மிளகாய்தூள், தனியாதூள்,மஞ்சள்தூள் தேவையான த்ண்ணீர் ஊற்றி [ 4 கப்] குக்கரை மூடி விட்டு சிம்மில் வைத்து இ விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். சுவையான மசாலா வாசனையுடன் தக்காளி பிரியாணி ரெடி. அடுப்ப்ன் எரிச்சல் சிறியதாக எரிவதால் தீயாது. தண்ணீர் குறைவாக வைத்தாலோ, அதிகம் ஆகி போனாலோ பயப்பட வேண்டாம். பதமாக வெந்து இருக்கும்.பிரியாணி செய்ய கொஞ்சம் அதிகம் எண்ணெய் சேர்த்தால்தான் உதிராக வரும். கடைசியில் கொஞ்சம் நெய்யும் ஊற்றலாம்.

No comments:

Post a Comment