Wednesday, June 11, 2008

தக்காளி குருமா

தேவையான பொருள்கள் :

நாட்டு தக்காளி - 1/4 கிலோ
பெங்களூர் தக்காளி - 100 கிராம்
சிறிய தேங்காய் - 1 [ துறுவியது 1- கப்]
இஞ்சி - சின்ன துண்டு
பூண்டு - 2 பல்
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
தனியா தூள் - 1/4 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
சோம்பு - 1/4 ஸ்பூன்
மஞ்சள் பொடி - கொஞ்சம்
கச்கசா - 2 ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1
உப்பு - தேவையானது

செய்முறை :

தேங்காயுடன் இஞ்சி, பூண்டு, சோம்பு,கசகசா, மிளகாய் தூள், தனியா தூள், 2 தக்காளியும் சேர்த்து அரைத்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி, மஞ்சள் பொடிஉப்பு சேர்த்து வதக்கி பச்சை வாசனை போன பின் அரைத்த விழுதில் கொஞ்சம் தண்ணீர் கலந்து கொதிக்க விட்டு இறக்க்வும். புளிப்பு சுவை கொண்ட டேஸ்டியான குருமா. இதை சப்பாத்தி, பூரி, இட்லி, தோசை எல்லாவற்றுக்கும் தொட்டு கொள்ளலாம்.

1 comment:

  1. குருமா செய்து பார்த்ததில் அருமையாக வ்ந்த்தது

    ReplyDelete