Saturday, January 19, 2008

பூண்டு இல்லாத, மசால்பொடி சேர்க்காத தக்காளி சாதம்.

தேவையான பொருள்கள்:

உங்களுக்கு பிடித்த அரிசி - 1 டமளர்
தக்காளி - 5
பெரிய வெங்காயம்-2
பச்சை மிளகாய்-3
மஞ்சள்தூள்- கொஞ்சம்
உப்பு- தேவையானது

பொடி செய்ய:

கடலைப்பருப்ப, உளுத்தம்பருப்பு, தனியா- தலா- 1 ஸ்பூன், பெருங்காயம்- சிறிய துண்டு, மிளகாய்-3 தேங்காய் துறுவியது- 2 ஸ்பூன், கொஞ்சம் உப்பு. தாளிக்க- கடுகு- 1/4 ஸ்பூன்.

செய்முறை:

ப்ரஷர் பேனில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை பொடியாக நறுக்கி வதக்கவும். அதன்பின் தக்காளியை பொடியாக நறுக்கி, பச்சை மிளகாயை கீறி அதில் போட்டு வதக்கவும். மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். சாறு சுண்டியபின் அரிசியைபோட்டு சிம்மில் வைத்து வதக்கவும். பொடி செய்ய கூறபட்டுள்ளதை சிவப்பாக வறுத்து பொடிசெய்து அரிசியுடன் போட்டு வறுக்கவும். தேவையான எண்ணெய் சேர்த்து கொள்ளவும். 2நிமிடம் கழித்து 2பங்கு தண்ணீர் ஊற்றி பேனை மூடி வைத்து சிம்மில் வைத்து ஒரு விசில் வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு சூடு ஆறியபின் மேலே, மல்லி இலை தூவி சாப்பிடவும். தேவையானால் 2ஸ்பூன் நெய் போடலாம்.சுவையாக இருக்கும் இந்த தக்காளி சாதம். நேரம் கிடைக்கும்போது பொடியை செய்து வைத்து கொண்டால் இன்னும் சீக்கிரம் செய்து விடலாம்.

No comments:

Post a Comment