Saturday, January 12, 2008

பட்டாணி பனீர் மசாலா

தேவையான பொருள்கள்; பட்டாணி- 200 கிராம்
பெரிய வெங்காயம் - 3
தக்காளி சிவப்பு கலரில்- 5
இஞ்சி, பூண்டு, முந்திரி விழுது- தலா 1- ஸ்பூன்
மிளகாய்தூள்- 2 ஸ்பூன்
தனியாதூள்- 1 ஸ்பூன்
மஞ்சள்தூள்- 1/4 ஸ்பூன்
கரம் மசாலாதூள்- 1/2 ஸ்பூன்
உப்பு தேவையானது
வெண்ணெய்- 2 ஸ்பூன்

செய்முறை; பட்டாணியை உப்பு போட்டு வேகவைத்து கொள்ளவும். பனீரை சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொஞ்சம் வெண்ணெயில் வதக்கவும். அதனுடன் தக்காளியையும் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். ஆறியபின் அதனுடன் தனியாதூள், மிளகாய்தூள், கரம்மசாலாதூள் மஞ்சள்தூஉள் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். கெட்டியான வாணலியை அடுப்பில் வைத்து வெண்ணெய் போட்டு இஞ்சி,பூண்டு விழுதை
போட்டு வதக்கவும். உப்பு போடவும். பச்சை வாசனை போனவுடன் அரைத்த விழுதை போட்டு வதக்கி கொஞ்சம் தண்ணீர் சேர்த்து பட்டாணி, பனிர் போட்டு கொஞ்ச நேரம் சிம்மில் வைக்கவும். கடைசியில் மேலே கொஞ்சம் எண்ணெய் [2] ஸ்பூன் ஊற்றி சுருள வந்தவுடன் கிளறி இறக்கவும். சுப்பரான பட்டாணி மசாலா ரெடி.இது சாப்பாட்டுக்கும், டிபனுக்கும் ஏற்றது.

No comments:

Post a Comment