Saturday, January 12, 2008

ஆலு மசாலா

தேவையான பொருள்கள்

உருளைக் கிழங்கு- 1/4 கிலோ
பெரிய வெங்காயம்-2
மிளகாய்தூள்- 2 ஸ்பூன்
தனியாதூள், சீரகதூள்,- 1/4 ஸ்பூன்
கரம் மசாலா- 1/4 ஸ்பூன்
தக்காளி- 6
மிளகாய்தூள்- கொஞ்சம்
இஞ்சி, பூண்டு விழுது- 1/2 ஸ்பூன்
சிறுகட்டி- வெல்லம்
உப்பு தேவையாவை
எண்ணெய்-50 கிராம்.

செய்முறை

உருளைகிழங்கை வேகவைத்து சதுரமான துண்டுகளாக செய்து வைக்கவும். தக்காளி, வெங்காயத்தை லேசாக வதக்கி ஆறியபின் அரைத்து கொள்ளவும். கெட்டியான வாணலியை வைத்து கிழங்கை பொரித்து எடுக்கவும்.
அதிலேயே இஞ்சி, பூண்டு விழுதை போட்டு வதக்கி, மிளகாய்தூள், கரம் மசாலாதூள், சீரகதூள், தனியாதூள் போட்டு பச்சை வாசனைபோக வதக்கி தக்காளி கலவை, உப்பு போட்டு மிதமாக எரியவிட்டு வதக்கவும். சுண்டியவுடன் 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி பொரித்த கிழங்கை போட்டு கொதிக்கவிடவும். சிம்மில் அடுப்பை எரிய விடவும். எண்ணெய் மேலே வந்தபின் இறக்கி மல்லி இலை தூவினால் ஆலு மசாலா ரெடி.

No comments:

Post a Comment