Saturday, January 12, 2008

பீஸ் மசாலா

தேவையான பொருள்கள்; பட்டாணி- 200 கிராம்
பெரிய வெங்காயம்-3
தக்காளி- 4
புளிக்காத தயிர்- 1/2 கப்
இஞ்சி, பூண்டு விழுது- 1 ஸ்பூன்
மிளகாய்தூள்- 2 ஸ்பூன்
தனியாதூள்- 1/2 ஸ்பூன்
கரம் மசாலா- 1/4 ஸ்பூன்
எண்ணெய்- 25 கிராம்
உப்பு தேவையானவை

செய்முறை: பட்டாணியை உப்பு சேர்த்து வேகவைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி லேசாக வதக்கி அதனுடன் தக்காளியையும் சேர்த்து வதக்கி அரைக்கவும். எண்ணெயை வைத்து அதில் இஞ்சி பூண்டை பச்சை வாசனை போக வதக்கி அரைத்த விழுது, மிளகாய்தூள்,கரம் மசாலாதூள், தனியாதூள் இதற்கு தேவையான உப்பு போட்டு வதக்கவும். பட்டாணியை சேர்க்கவும். பின் தயிர் சேர்ககவும். கடைசியில் கொஞ்சம் வெண்ணெய் சேர்த்து கிரேவி வாசனை வந்தவுடன் மல்லி இலை போட்டு இறக்கவும். பீஸ் மசாலா தயார்.

No comments:

Post a Comment