Thursday, January 17, 2008

பொடி போட்ட தக்காளி குழம்பு

தேவையான பொருள்கள்:

தக்காளி- 6
புளி எலுமிச்சை அளவு
பூண்டு- 10 பற்கள், சிறிய வெங்காயம்-20
பச்சை மிளகாய்-5
மிளகாய்தூள்- 1 ஸ்பூன்
தனியாதூள்- 1/4 ஸ்பூன்
மஞ்சள்தூள்- கொஞ்சம்
உப்பு- தேவையானது
தாளிக்க கடுகு, வெந்தயம், சீரகம்.
பொடிக்க: மிளகு-10, உளுத்தம்பருப்பு-1/2 ஸ்பூன்,சீரகம்-1/4 ஸ்பூன், வெந்தயம்- 1/4 ஸ்பூன், கடுகு- 1/4 ஸ்பூன்.

செய்முறை:

புளியை சுடுநீரில் ஊறவைத்து கரைத்து கொள்ளவும். பொடிக்க கொடுத்துள்ள பொருள்களை லேசாக வறுத்து பொடிசெய்து கொள்ளவும். தக்காளி, பூண்டு, வெங்காயம் இவற்றை பொடியாக நறுக்கி வதக்கவும். இன் புளிதண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும். உப்பு, மஞ்சள்தூள், பச்சைமிளகாய், மிளகாய்தூள், தனியாதூள் சேர்த்து வதக்கவும். 2 நிமிடம் கழித்து பொடி செய்து வைத்துள்ளதை போட்டு 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். அடுப்பை மிதமாக எரியவிட்டு செய்யவும். கடுகை தாளித்துபோட்டு கொஞ்சம் எண்ணெய் ஊற்றி குழம்பில் ஊற்றவும். 2, 3 நாடகள் இருந்தால்கூட இந்தகுழம்பு கெடாது. கடைசியில் சிறியகட்டி வெல்லம் சேர்க்கவும். சூப்பராக இருக்கும் இந்த குழம்பு.

No comments:

Post a Comment