Friday, January 25, 2008

பாசிப் பருப்பு மசாலா குழம்பு

தேவையான பொருட்கள் :

பாசிப்பருப்பு - 200 கிராம்
நன்கு பழுத்த தக்காளி - 4
மிள்காய் தூள் - 2 ஸ்பூன்
தனியா தூள் - 1/2 ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 ஸ்பூன்
இஞ்சி, பூண்டு - பொடியாக நறுக்கியது- தலா- 1 ஸ்பூன்
உப்பு - தேவையானவை
தாளிக்க - கடுகு, சீரகம். கறிவேப்பிலை, மல்லி இலை

செய்முறை:

பாசிப்பருப்பை லேசாக வறுத்து, மஞ்சள்தூள் போட்டு ப்ரஷர் பேனில் மூடி போட்ட பாக்ஸில் வேகவிடவும். இவ்வாறு வேகவிட்டால் பொங்காது. குழையாது. சிம்மில் வைத்து 1 விசில் விட்டால் போதும். மலரவெந்து இருக்கும். அதே பேனில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் தாளித்து இஞ்சி, (தேவையானால் பூண்டு போட்டு) வதக்கவும். மிளகாய்தூள், தனியாதூள் தக்காளி பொடியாக நறுக்கி கைகளால் பிசைந்து போட்டு நன்கு வதக்கவும்.உப்பு போட்டு வெந்த பருப்பை போட்டு தேவையான தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து நுரைத்து வந்தபின் கறிவேப்பிலை, மல்லி போட்டு விடவும். தேவையானால் இறக்கியபின் 1 ஸ்பூன் வாசனைக்கு தேங்காய் எண்ணெய் ஊற்றவும். இது கிராமத்து குழம்புபோல் இருக்கும். சாப்பாட்டிற்க்கும், டிபனுக்கும் ஏற்ற டிஷ்.

No comments:

Post a Comment