Saturday, January 12, 2008

பெப்பர் பீஸ் மசாலா

செய்முறை: பட்டாணி- 200 கிராம்
பெரிய வெங்காயம்- 3
தக்காளி- 4
மிளகு, சீரகம், சோம்பு- தலா 1 ஸ்பூன்
கரம் மசாலாதூள்- 1/4 ஸ்பூன்
மிளகாய்தூள்-1 1/2 ஸ்பூன்
தனியாதூள்- 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை- கொஞ்சம்
உப்பு- தேவையானவை
எண்ணெய்- கொஞ்சம்
செய்முறை; பட்டாணியை உப்பு போட்டு வேகவைத்து கொள்ளவும்.தக்காளி, வெங்காயத்தை வதக்கவும். அதனுடன், மிளகு,சீரகம், சோம்பு, இவற்றை லேசாக வறுத்து அதனுடன் கறிவேப்பிலையும் சேர்த்து மிக்ஸியில் மைய அரைத்து கொள்ளவும். கெட்டியான வாணலியில் எண்ணெய் ஊற்றி இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கி பட்டாணியை போட்டு வதக்கவும். அரைத்த மிளகு கலவையை போட்டு உப்பு போட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும். இதில் மிளகுகாரம் அதிகமாக இருக்க வேண்டும். அந்த வாசனை தனியாக தெரியும். கடைசியில் எண்ணெய் பிரிந்து மேலே வந்தபின் இறக்கி விடவும். இதுதான் பீஸ் மசாலா. சூப்பராக இருக்கும்.தேவையானால் மேலே 1 ஸ்பூன் வெண்ணெய் போடலாம்.

No comments:

Post a Comment