Thursday, November 8, 2007

கண்டந்திப்பிலி ரசம்

தேவையான பொருட்கள்:

கண்டந்திப்பிலி - 10 கிராம்,
அரிசி திப்பிலி- 10 கிராம்,
தனியா- 1 ஸ்பூன், சீரகம்-1 ஸ்பூன்,
மிளகு- 1/4 ஸ்பூன்,
காய்ந்த மிளகாய்-4,
புளி- எலுமிச்சை அளவு,
தாளிக்க- கடுகு- 1/2 ஸ்பூன்,
தாளிக்க நெய்- 1 ஸூன்,
உப்பு- சுவைக்கு ஏற்ப .

செய்முறை:

கண்டந்திப்பிலி, அரிசி திப்பிலியை நெய்யில் வறுத்து, மிக்ஸியில் பொடி செய்து கொண்டு பின், அதனுடன் மேலே கூறியுள்ள பொருட்கள் அனைத்தயும் பச்சையாகவே போட்டு அரைக்கவும். புளியை சுடுநீரில் ஊற வைத்து கரைத்து கொள்ளவும். ஒரு கெட்டியான பாத்திரத்தை அடுப்பில் வைத்து 1 ஸ்பூன் நெய் ஊற்றி கடுகு, மிளகாய் தாளித்து, கொஞ்சம் மஞ்சள்தூள் போட்டு புளி கரைசலை ஊற்றி, உப்பும் போட்டுகொதிக்க விடவும். பாதி சுண்டிய பின் அரைத்த விழுதை போட்டு நுரைத்து வந்ததும் இறக்கி விடவும். இதற்கு தக்காளி சேர்க்க கூடாது. சேர்த்தால் கண்டந்திப்பிலியின் குணம் கிடைக்காது. இந்த ரசத்தை சூடாக குடித்தால் தலைவலி, ஜலதோஷம்,உடம்புவலி நீங்கும்.

No comments:

Post a Comment