Monday, November 5, 2007

மசாலா பொங்கல்

தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி-2 கப் (இதில் செய்வதால் நல்ல மணம் கிடைக்கும்).
பாசிப்பருப்பு - 1/2 கப்
தேவையான பிடித்த காய்கள் - 1 கப்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 4
பச்சை மிளகாய் - 5
இஞ்சி - சிறிய துண்டு (பொடியாக நறுக்கி கொள்ளவும்)
பூண்டு - 10 பற்கள் (பொடியாக நறுக்கியது)
மிளகு - 2 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
பட்டை - சிறிய துண்டு
லவங்கம் - 4
ஏலக்காய் - 3
எண்ணெய் - 3 ஸ்பூன்
நெய் - 25 கிராம்
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

சமைக்க 1/2 மணி முன்பு அரிசி, பாசிப்பருப்பை, லேசாக வறுத்து ஊற வைக்கவும். வறுப்பதால் வாசனையாக இருக்கும். ப்ரஷ்ர் பேனை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடு ஆனதும் பட்டை, லவங்கம், ஏலக்காய் போட்டு நறுக்கிய வெங்காய்த்தை போட்டு வதங்கியதும், தக்காளி போட்டு 2 நிமிடம் கழித்து, நறுக்கிய காய்களை போட்டு கிளறி 5 டம்ளர் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கொதி வந்ததும், அரிசி, பருப்பை போட்டு பேனை மூடிவிட்டு சிம்மில் வைத்து 2 விசில் விட்டு இறக்கவும் தாளிப்பு கரண்டியை போட்டு மிளகு,சீரகத்தை பொடி செய்து பொரித்து அதனுடன், கீறிய பச்சை மிளகாயை போட்டு லேசாக வதக்கி பொங்கலில் போடவும்.மல்லி இலை பொடியாக தூவி விடவும்.ம்ணம்,சுவை உடைய மசாலா பொங்கல் தயார்.

No comments:

Post a Comment