Monday, November 5, 2007

அரிசி உப்புமா

தேவையான பொருட்கள்:

பச்சரிசிகுருனை - 2 கப்
துறுவிய தேங்காய் - 2 கப்
தண்ணீர் - 5 கப்
தாளிக்க: கடுகு, கடலை பருப்பு, உளுத்தபருப்ப, சீரகம், தலா - 2 ஸ்பூன்,
பெருங்காயம் - 1/2 ஸ்பூன், பச்சைமிளகாய் பொடியாக நறுக்கியது-6, [அ] வரமிளகாய் - 6 (கிள்ளி வைத்து கொள்ளவும்) உப்பு - தேவையான அளவு
தாளிக்க எண்ணைய்.

செய்முறை:

ப்ரஷர் பேனை அடுப்பில் வைத்து எண்ணைய் ஊற்றி நன்கு காய்ந்த்தும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு, சீரகம், பெருங்காயம், பொடியாக நறுக்கிய இஞ்சி,மிளகாய்,இவற்றை போட்டு நன்கு சிவக்க வறுபட்ட பின், தேங்காய் போட்டு வதக்கி 5 கப் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு நன்கு கொதித்து வரும் சமயம் பச்சரிசி குருனையை போட்டு நன்கு கலந்து ஒரு விசில் விட்டு இறக்கவும். சிறிது நேரம் கழித்து ப்ரஷர் பேனை திறந்து கறிவேப்பிலை, மல்லி பொடியாக ந்றுக்கி, வாசனைக்கு 1 ஸ்பூன் தேங்காய் எண்ணைய் ஊற்றி கலந்து சாப்பிடவும். தக்காளி சட்னி,[அ]இஞ்சி பச்சடி இத்ற்கு சுவையாக இருக்கும். அடுப்பை சிம்மில் வைக்கவேண்டும். இல்லையெனில் உப்புமா தீய்ந்து போய்விடும்.

No comments:

Post a Comment