Monday, November 5, 2007

ரசப்பொடி

தேவையான பொருள்கள்:

மிளகு, சீரகம் - 200 கிராம்
துவரம் பருப்பு, கடலை பருப்பு - 50 கிராம்
கட்டி பெருங்காயம் - 10 கிராம்
வரமிளகாய் - 100 கிராம்
மஞ்சள்தூள் - 2 ஸ்பூன்
உப்பு தேவையான அள்வு
சுத்தம் செய்யபட்ட புளி - 100 கிராம்

செய்முறை:

மேலே கொடுததுள்ள பொருட்க்ளை தனிதனியாக எண்ணைய் விடாமல் வறுத்து, புளியை சிறிதாக பிய்த்து போட்டால் நன்றாக வறுபட்டுவிடும். கடைசியில் உப்பையும் வறுத்து, எல்லாவற்றையும் நன்கு கலந்து ஆற வைத்து மிக்ஸியில் பவுடர் செய்து, மஞ்சள் தூள் கலந்து கொள்ளவும். வாணலியில் 1 ஸ்பூன் நெய் ஊற்றி கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து, தேவைபட்டால் தக்காளியை பொடியாக நறுக்கி கையால் பிழிந்து கொண்டு தாளித்த பொருட்களுடன் சேர்த்து, அரைத்து வைத்துள்ள பொடியை தேவையான அளவு போட்டு வதக்கி, புளிப்புக்கு தகுந்தபடி தண்ணீர் விட்டு நுரைத்து வந்த பின் இறக்கி வைத்து சாப்பிடலாம். இந்த பொடியில் புளியையும் வறுத்து கொள்வதாலும், மேலும் அநத பொடியில், கடுகும், சீரகமும் தாளித்து கலந்து கொண்டால், தேவையான பொடியை நீரில் கலக்கி நுரைத்து வரும் சமயம் 1 ஸ்பூன் நெய் விட்டு, மல்லி இலை தூவியும் செய்யலாம். 2 நிமிடம் இருந்தால் போதும் இந்த ரசம் செய்து விடலாம்.

No comments:

Post a Comment