Monday, November 5, 2007

பச்சரிசி தட்டை

தேவையான பொருள்கள்:

பச்சரிசி மாவு- 1கப்,
உளுத்தம் மாவு- 1 ஸ்பூன்,
கடலைபருப்பு,[அ] பாசிபருப்பு- 1 ஸ்பூன்,
மிளகாய்தூள்- 1 ஸ்பூன்,
பெருங்காயம்- கொஞ்சம்,
வெண்ணெய்- 1/2 ஸ்பூன்[தேவையானால்]
உப்பு- 1/2 ஸ்பூன்,
எண்ணெய்- பொரிக்க

செய்முறை:

மாவு அரிசியை 1/2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து வடிய விட்டு மாவாக திரித்து கொள்ளவும். இந்த வகையில் செய்யும் பலகாரங்கள் சுவையாக இருக்கும். பருப்பை 10 நிமிடம் நீரில் ஊறவைக்கவும். கொஞ்சம் தண்ணீரிலஉப்பையும்,பெருங்காயத்தையும் ஊறவைத்து கரைத்து கொள்ளவும்.

ஒரு கிண்ணத்தில் சலித்த அரிசி மாவையும்,ஊளுத்தம்மாவையும் நன்கு கலந்து அதோடு, வெண்ணெய், மிளகாய்தூள் போட்டு கலந்து வைக்கவும். ஊற வைத்துள்ள கடலைபருப்பை வடித்து மாவில் சேர்த்து, உப்பு,பெருங்காய தண்ணீரையும் ஊற்றி, கொஞ்சமாக நீரை தெளித்து பிசையவும்.இந்த மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி, ஒரு வெள்ளை துணியில் ஒவ்வொரு உருண்டையும் வைத்து அதை விரல்களால் தட்டைகளாக தட்டவும்.
துணியில் தட்டையை தட்டுவதால் அதிக ஈரம் இருந்தால் அதை இழுத்து கொள்ளும். சரியான பதமாக இருந்தால் வாழை இலை,[அ] பிளாஸ்டிக் கவர் எதில் வேண்டுமானாலும் தட்டி கொள்ளலாம். ஊறவைத்த பருப்புகளில் நிலகடலை,பொட்டுகடலை எது வேண்டுமானாலும் சேர்க்கலாம். நம் விருப்பம்.

No comments:

Post a Comment