Monday, November 5, 2007

பாகற்காய் பிட்ளை

தேவையானது:

பாகற்காய் - 300 கிராம்,
துவரம் பருப்பு - 100 கிராம்
புளி - 25கிராம்,
கடலைபருப்பு- 2 ஸ்பூன்,
உளுத்தம்பருப்பு - 1/4 ஸ்பூன்,
தனியா - 3 ஸ்பூன்,
வரமிளகாய் - 8,
பெருங்காயம் - சிறிய துண்டு
தேங்காய் துருவல் - 2 ஸ்பூன்,

செய்முறை:

பாகற்காயை பொடியாக நறுக்கி மஞ்சள்தூள், உப்பு கொஞ்சம் சேர்த்து பிசிறி வைக்கவும. வாணலியை அடுப்பில் வைத்து கொஞ்சம் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பெருங்காய்த்தை பொரித்து எடுத்து கொண்டு உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு, தனியா, இவற்றை சிவக்க பொன் கலரில் வறுத்து பின் தேங்காய், மிளகாய் போட்டு வறுத்து இறக்கி ஆற வைத்து மிக்ஸியில் கர கரவென்று அரைத்து கொள்ளவும். அதே வாணலியில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி காய்ந்த்தும் கடுகு, தாளித்து பாகற்காயை போட்டு நன்கு வதக்கவும். பருப்பை நன்கு குழைய வேக வைக்கவும். புளியை சுடுநீரில் ஊற வைத்து கெட்டியாக கரைத்து கொள்ளவும். நன்கு வெந்த காயுடன், பருப்பு, அரைத்த விழுது, புளி, உப்பு போட்டு நன்கு கொதிக்க விடவும். தேவைபட்டால் சிறிய கட்டி வெல்லம் சேர்த்து கொள்ளலம். சுவையான மணக்கும் பாகற்காய் பிட்ளை தயார். கடைசியில் மல்லி, கறிவேப்பிலை போடவும்.

No comments:

Post a Comment