Monday, November 5, 2007

முளை கட்டிய பாசிபயறு குழம்பு

தேவையானவை:

பாசிபயறு - 300 கிராம்,
பெரிய வெங்காயம் - 2,
பெங்களுர் தக்காளி -4. [இதற்கு பெங்களுர் தக்காளிதான் நன்றாக இருக்கும். அதில்தான் குழம்பு கிடைக்கும். பெரியதாக இருக்கனும்]
கறிமசால் பவுடர் - 2 ஸ்பூன்,
இஞ்சி, பூண்டு விழுது - 2 ஸ்பூன்,
மிளகாய்தூள் -2 ஸ்பூன்,
தனியாதூள் - 1 ஸ்பூன்,
உப்பு தேவையானது

செய்முறை:

பாசிபயறை முதல் நாளே நன்கு கழுவி ஊற வைத்து இரவில் தண்ணீரை வடித்துவிட்டு ஹாட் பேக்கில் போட்டு வைத்தால் அடுத்தநாள் முளை கட்டிவிடும். தக்காளி, வெங்காயத்தை பச்சையாக மிக்ஸியில் நன்கு விழுதாக அரைத்து கொள்ளவும். கெட்டியான வாணலியை அடுப்பில் வைத்து கடுகு, சீரகம் தாளித்து இஞ்சி,பூண்டு விழுதை போட்டு கொஞ்சம் வதங்கியபின் தக்காளி விழுதை போட்டு கொஞ்சம் எண்ணெய் விட்டு வதக்கவும். பின் மசால்பொடி, தனியா தூள், மிளகாய்தூள், உப்பு, மஞ்சள்தூள் போட்டு வதக்கி 2 கப் தண்ணீர் ஊற்றி முளைகட்டிய பயறை போட்டு நன்கு கலந்து சிம்மில் அடுப்பை எரிய விட்டால் கொஞ்ச நேரத்தில் குழம்பு நன்கு கொதித்து எண்ணெய் மேலே வரும். கெட்டியாக இருந்தால் கொஞ்சம் தண்ணீர் சேர்க்கலாம். [பயறை போட்டபின் குக்கரில் 1 விசில்விட்டு இறக்கலாம.] இந்த குழம்பு சாப்பாட்டுக்கும், டிபனுக்கும் சூப்பர் சைட் டிஷ்.

No comments:

Post a Comment