Monday, November 5, 2007

மோர் குழம்பு

தேவையான பொருட்கள்:

பிடித்தமான காய்கள்,
தயிர் - 2 கப்,
தேங்காய் துருவல் - 1 கப்,
பச்சை மிளகாய்-6,
சீரகம் - 1 ஸ்பூன்,
உப்பு.

செய்முறை:

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம் தாளித்து, காய்களை போட்டு வதக்கவும். அதற்குள் தேங்காய், மிளகாய், சீரகம் இவற்றை மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும். இப்போது காய் வெந்து இருக்கும். அதனுடன், மஞ்சள்தூள், அரைத்த விழுது சேர்த்து நன்கு கொதிக்க விட்டு அடுப்பை அணைத்து விட்டு தயிரை கடைந்து ஊற்றி கலந்து விடவும். மல்லி, கறிவேப்பிலை, 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி கலந்து மூடி விடவும். மணக்கும் மோர்க் குழம்பு தயார்.

No comments:

Post a Comment