Monday, November 5, 2007

கொட்டு ரசம்

தேவையானவை:

துவரம்பருப்பு - 2 ஸ்பூன்,
தனியா - 1 ஸ்பூன்,
மிளகு, சீரக்பொடி - 1ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
பெருங்காயம் - 1/4 ஸ்பூன்
புளி எலுமிச்சை அளவு
தாளிக்க கடுகு, சீரகம்
உப்பு தேவையானது
2- ஸ்பூன் நெய்

செய்முறை:

புளியை 5நிமிடம் முன்பு சுடுநீரில் ஊறவைக்கவும். மேலே கொடுத்துள்ள பொருள்களை எண்ணெய் விடாமல் வறுத்து கரகர வென்று பொடி செய்து கொள்ளவும். புளியை நன்கு கரைத்து இந்த பொடியை கலந்து கொதிக்க வைத்து புளிப்புக்கு தகுந்த தண்ணீர், உப்பு சேர்த்து நுரைத்து வந்ததும் இறக்கி வைத்து நெய்யை காய வைத்து கடுகு, சீரகம் பெருங்காயம் தாளிக்கவும். கடைசியில் மிளகு, சீரகபொடி, கறிவேப்பிலை,மல்லி சேர்க்கவும்.

இந்த ரசம் உடலுக்கு மிகவும் நல்லது. சளி, காய்ச்சல் உள்ளவர்கள் இந்த ரசம் செய்து சாப்பிட்டால் சீக்கிரம் குணமாகும். சீக்கிரம் செய்து விடலாம்.நெய்யில் தாளித்தால்தான் இந்த ரசம் ருசியாக இருக்கும்.

No comments:

Post a Comment