Monday, November 5, 2007

தக்காளி மசாலா குழம்பு

தேவையான பொருட்கள்:

நாட்டு தக்காளி-1/2கிலோ
வெங்காயம் - 200 கிராம்,
இஞ்சி-பூண்டு விழுது - 2 ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்
மிளகாய்தூள் - 2 ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 ஸ்பூன்
தனியாதூள் - 1 ஸ்பூன்
தேவையான உப்பு.

செய்முறை:

தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி, வாணலியில் எண்ணெய் காயவைத்து கடுகு தாளித்து,மஞ்சள்தூள் போட்டு, இஞ்சி, பூண்டு விழுதை போட்டு,பச்சை வாசனை போனபின்,நறுக்கிய தக்காளி, வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும். சிறிது நேரம் கழித்து மிளகாய்தூள், தனியாதூள், [சோம்பு,4-பச்சை மிளகாய் அரைத்த விழுது] இவற்றை போட்டு நன்கு கிளறி பச்சை வாசனை போனபின் 2டமளர் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட்டு இறக்கினால் தக்காளி மசாலா குழம்பு தயார். இது சாப்பாட்டிற்கும், டிபனுக்கும் ஏற்றது. ரிச்சாக வேண்டும் எனில் 2 ஸ்பூன் வெண்ணைய் மேலே போட்டு இறக்கலாம்.

No comments:

Post a Comment