Monday, November 5, 2007

புழுங்கரிசி தட்டை

தேவையான பொருள்கள்:

இதற்கு இட்லிக்கு போடும் அரிசிதான் ரொம்ப சுவையாக இருக்கும்.
வறுத்து பொடி செய்த உளுத்தம் பருப்பு - 3 ஸ்பூன்
நெய்- 2 ஸ்பூன்,
மிளகாய்தூள்- 2[அ] 5 ஸ்பூன்,
கறுப்பு எள்- 2 ஸ்பூன்,
கட்டிபெருங்காயம் சிறிய துண்டு,
கல் உப்பு தேவையான அளவு,

செய்முறை:

அரிசியை நன்கு கழுவி 1 /2 மணி நேரம் ஊற வைத்து , அதனுடன் [கட்டி பெருங்காயத்தையும்,கல் உப்பையும் நீரில் ஊற வைத்து கரைத்து ஊற்றி] கிரைண்டரில் கெட்டியாக அரைக்கவும்.

அரைத்த மாவில் மிளகாய்தூள், சுத்தம் செய்த எள், உளுத்தம்மாவு, கறிவேப்பிலை நெய் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். மெல்லிய சுத்தமான துணியில் உருண்டைகளாக உருட்டி கொண்டு, வட்டமாக தட்டவும். பெரிய உருண்டைகளாக செய்து சப்பாத்தி தேய்ப்பது போல் தேய்த்து, தேவைபடும் அளவில் மூடிகளை வைத்தும் கட் செய்து கொள்ளலாம்.இது போல் செய்தால் சீக்கிரம் நிறைய தட்டை செய்யலாம்.

தட்டை 2 நிமிடம் காயட்டும். ஈரமாக இருக்கும்போது போட்டால் அதிக எண்ணெய் குடிக்கும். அதிக நேரம் காய்ந்து போனாலும், சிவந்து போகும். உளுத்தம் பொடி வாசனைக்கு தான் சேர்க்க வேண்டும். அதிகம் சேர்த்தால செய்யும் சமயம் மொறுப்பாகவும், சில நாட்களில் நமுத்தும் போய் விடும்.

No comments:

Post a Comment