Monday, November 5, 2007

வாழைக்காய் குழம்பு

தேவையானவை:

பாசிபருப்பு - 1/4 கப்
வாழைக்காய் பெரியது - 1
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 5
புளி சிறிய எலுமிச்சை அளவு [அ] எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 5
சாம்பார் பொடி - 1 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
தாளிக்க, கடுகு, சீரகம்
பெருங்காயம் - 1/4 ஸ்பூன்

செய்முறை:

பாசிபருப்பை லேசாக வறுத்து மலர வேக வைத்து கொள்ள வேண்டும். வறுப்பதால் குழம்பு, வாசனையாகவும், அதிக நேரம் இருந்தாலும் கெடாமலும் இருக்கும். வாழைக்காயை பொடியாக நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும். கெட்டியான் வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்த பின் கடுகு,சீரகம் தாளித்து மஞ்சள்தூள் சேர்த்து பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். நறுக்கி வைத்துள்ள வாழைக்காயை சேர்த்து வதக்கவும். பின் புளி கரைசலை ஊற்றி சாம்பார் பொடியையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி, வேக வைத்துள்ள பருப்பை கரைத்து ஊற்றி, உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இறக்கவும். எலுமிச்சை சாறு சேர்ப்பதாக இருந்தால் குழம்பை இறக்கும் சமயம் சேர்க்கவும். இந்த குழம்பு கொஞ்சம் தண்ணீயாக இருந்தால்தான் ருசியாக இருக்கும். இறக்கிய பின் கறிவேப்பிலை, மல்லி பெருங்காயம் சேர்க்கவும். வாழைக்காயில் வித்யாசமான டிஷ் இது.

No comments:

Post a Comment