Monday, November 5, 2007

பனீர் பட்டர் மசாலா

தேவையான பொருட்கள்:

பனீர் - 200 கிராம்
பெரிய வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 150 கிராம்
இஞ்சி,பூண்டுவிழுது - 1 டீஸ்பூன்
மிளகாய்தாள் - 2 டீஸ்பூன்
தனியாதூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - அரை ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பனீரை சிறுதுண்டுகளாக கட் செய்து கொள்ளவும். வெங்காயம், தக்காளியை தனித்தனியாக மைய அரைத்துக் கொள்ளவும். வாணலியில் கொஞ்சம் எண்ணைய் உற்றி அதில் இஞ்சி, பூண்டுவிழுதைச் சேர்த்து, தீயை குறைத்து வைத்து அந்த விழுது நிறம் மாறி, பச்சை வாசனை போகும் வரை நன்கு வத்க்கி, அதனுடன் மிளகாய்தூள், தனியாதூள், கரம் மசாலா, தக்காளி, வெங்காயம் விழுது சேர்த்து, உப்பும் சேர்த்து நன்கு வதக்கிய பின், பனீர் துண்டுகளை சேர்த்து நன்கு சுருள வதக்கி மல்லி தழை தூவி இறக்கினால் சுவையான பனிர் பட்டர் மசாலா தயார். கொஞ்சம் கிரேவியாக வேண்டும் என்றால் 1 டம்ளர் தண்ணிர் விட்டு கொதிக்க விட்டு இறக்க வேண்டும். இது சாப்பாட்டிற்க்கும் நன்றாக இருக்கும். டிபனில் எந்த வகைக்கும் ஏற்றது.

No comments:

Post a Comment