Monday, November 5, 2007

வற்றல் குழம்பு

தேவையான பொருட்கள்:

மணத்தக்காளி [அ] சுண்டைக்காய் வற்றல் - 25 grms
புளி -100 grms[or] கரைத்த புளி 1-கப் கெட்டியாக
கடுகு, பெருங்காயம், வெந்தயம் - 1/2 ஸ்பூன்
அரிசி மாவு - 2 ஸ்பூன்
சாம்பார் தூள்[அ] குழம்பு தூள் - 2 ஸ்பூன்
வெல்லம் - சிறியக்கட்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வாணலியில் 50-gram எண்ணைய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு, வெடித்தபின் வெந்தயம், 2 காய்ந்த மிளகாய் கிள்ளி போட்டு, அதனுடன் வற்றலையும் போட்டு வறுத்து, சிவந்தபின் பெருங்காயம், மஞ்சள்தூள், கறிவேப்பிலை, கரைத்த புளியை சேர்த்து கொஞ்சநேரம் கொதிக்க விடவும். அதன் பின் 1 டம்ளர் நீரில் சாம்பார் தூள், அரிசிமாவையும் கட்டி இல்லாமல் கரைத்து, குழம்பில் விட்டு நனறாக கொதிக்க விடவும், குழம்பு கெட்டியாக வருவதற்க்கு அரிசி மாவு ஊற்றுகிறோம். கடைசியாக வெல்லத்தை பொடி செய்து குழம்பில் போடவும். மணமணக்கும் வற்றல் குழம்பு ரெடி. ;-)

No comments:

Post a Comment