Monday, November 5, 2007

பீன்ஸ் மசாலா குழம்பு

தேவையான பொருட்கள்:

பச்சை பட்டாணி -100கிராம்
பெரியவெங்காயம்- 2
தக்காளி - 4 [அ] 6
மிளகாய்பொடி - 3 ஸ்பூன்
தனியாதூள் - 1 ஸ்பூன்
கரம் மசாலா - 1/2 ஸ்பூன்
இஞ்சி-பூண்டு விழுது - 1 ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 ஸ்பூன்
உப்பு சுவைக்கு

செய்முறை:

காய்ந்த பட்டாணியாக இருந்தால் முதல் நாளே ஊறவைத்து விடவும். குருமா செய்ய ப்ரஷர் பேனில் செய்தால் ஈஸியாக இருக்கும். வெங்காயாம், தக்காளியை எண்ணைய் 1ஸ்பூன் விட்டு நன்கு வதக்கி ஆற வைத்து அரைத்துக் கொள்ளவும். பட்டாணியை உப்பு போட்டு வேக வைத்து, அதே பேனில் 2- ஸ்பூன் வெண்ணைய் போட்டு சீரகம் தாளித்து,இஞ்சி,பூண்டு விழுது - 2 நிமிடம் வதங்கியபின் அரைத்த தக்காளி,வெங்காய விழுதை போட்டு வதக்கவும்.மஞ்சள்தூள்,மிளகாய்தூள்,தனியதூள், கரம் மசாலாதூள், சிறிது உப்பு சேர்த்து வதக்கவும். வாசனைக்கு 3-பச்சைமிளகாயை கீறி போடலாம். ரிச்சாக வேண்டும் என்றால் 5+5=10 பாதாம்ப்பருப்பு, ந்திரிப்பருப்பு அரைத்து விடலாம். சூப்பராக இருக்கும்.

No comments:

Post a Comment