Monday, November 5, 2007

கறிமசால்ப் பொடி

தேவையான பொருட்கள்:

தனியா [எ] மல்லி விதை - 1/4 கிலோ
பட்டை - 10 கிராம்,
லவங்கம் - 10 கிராம்
சோம்பு - 10கிராம்
வரமிளகாய் - 100கிராம்
கடல் பாசி - 10-கிராம்
ஏலக்காய் - 10கிராம்
மராட்டி மொக்கு - 5 கிராம்
அன்னாசிப்பூ - 5 கிராம்
கல் உப்பு - 10 கிராம்.

செய்முறை:

மேலே கூறி உள்ள பொருட்களை நன்கு வெய்யிலில் காய வைத்து பச்சையாகவே மிக்ஸியிலோ, மிளகாய் அரைக்கும் மெஷினிலோ பவுடராக அரைத்து நன்கு கலந்து ஆற வைத்து பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளவும். குருமாவுக்குதான் பயன் படுத்தவேண்டும் என்று இல்லாமல், மசாலா வாசனை பிடித்தவர்கள் , பிடித்த சமையலில் பயன்படுத்திக் கொள்ளலாம். உப்பு போட்டு அரைப்பதால் பொடியில், பூச்சி, வண்டு எதுவும் வராது.

No comments:

Post a Comment