Monday, November 5, 2007

வாழைப்பூ கார குழம்பு

தேவையான பொடுட்கள்:

கசப்பு இல்லாத பூ-1, [நடுவில் உள்ள காம்பை ஆய்ந்து பெரிய இதழ்களை வைத்து கொள்ளவும்.]
கடலை மாவு - 4 ஸ்பூன்
அரிசி மாவு - 5 ஸ்பூன்
மிளகாய்தூள் - 2 ஸ்பூன்
உப்பு
நல்லெண்ணெய் - 100 கிராம்
தக்காளி சாறு - 100 கிராம்
பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது - 1
குழம்பு பொடி - 2 ஸ்பூன்

செய்முறை 1:

இரண்டு மாவுகளையும் சிறிது சமையல் சோடா சேர்த்து 2 ஸ்பூன் மிளகாய்தூள், பெருங்காயம், உப்பு சேர்த்து பஜ்ஜி மாவு போல் கரைத்து ஒரு, ஒரு பூவாக எடுத்து மாவில் தோய்த்து பொரித்து எடுக்கவும்.

செய்முறை 2:

அடுப்பில் கெட்டியான பாத்திரத்தை வைத்து 2 ஸ்பூம் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் தாளித்து, வெங்காயத்தையும் போட்டு நன்கு வதக்கி, மஞ்சள் தூள், குழம்பு பொடி, தக்காளிசாறு, உப்பு எல்லாம் பச்சை வாசனை போக வதக்கி பின், 1-டம்ளர் தண்ணீர் ஊற்றி சாப்பிடும் போது பொரித்த வாழைப்பூக்களை சேர்த்து இறக்கவும். முதலிலேயே பூவை சேர்த்தால் குழம்பின் சாறு ஊறி போய் குழம்பு கெட்டியாகிவிடும். ஊறி சாப்பிட விரும்புபவர்கள் இன்னும் 1-டமளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு பின் பொரித்ததை போட்டால் சரியாக இருக்கும். சாப்பிடும் போது பொரித்ததை போட்டு இறக்கவும்.

No comments:

Post a Comment