Monday, November 5, 2007

உப்புட்டு

தேவையான பொருட்கள்:

மைதா மாவு - 1/2 கிலோ
கடலைப்பருப்பு - 1/4 கிலோ
வெல்லம் - 1/2 கிலோ
தேங்காய் துறுவியது - 1 கப்
ஏலக்காய் பொடி - 1 ஸ்பூன்
நெய் - 300 கிராம் [அ] பிடித்த எண்ணைய்
கலர் தேவை எனில் - 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்

பூரணம் செய்முறை:

கடலைப்பருப்பை அரை வேக்காடு பதம் வேக வைக்கவும். வெல்லத்தை சுத்தம் செய்து, அடுப்பில் வைத்து கரைந்த பின் வடிக்கட்டி சுத்தம் செய்து, மறுபடியும் அடுப்பில் வைத்து பாகுபதம் வரும் சமயம் மிக்ஸியில் அரைத்த கடலைப்பருப்பு, துருவிய தேங்காய், ஏலக்காய் பொடி, போட்டு கெட்டியாக கிளறி வைக்கவும்.

உப்புட்டு செய்முறை:

1 மணி நேரம் முன்பு மைதாமாவை மஞ்சள் தூள், கொஞ்சம் நெய் போட்டு தேவையான தண்ணீர் சேர்த்து பிசைந்து ஊறவைக்கவும். அந்த மாவை சப்பாத்தி போல் இட்டு அதன் நடுவில் பூரணத்தை தேவையான அளவு வைத்து நனறாக மூடி, மீண்டும் அந்த மாவை சப்பாத்தி போல் இட்டு தோசைக்கல்லில் போட்டு நெய் ஊற்றி இரண்டு பககமும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும். இலையிலோ [அ] ப்ளாஸ்டிக் கவரிலோ தட்டலாம்.

No comments:

Post a Comment